Friday, September 12, 2008

ஒரு குட்டி தேவதை

ஒரு புன்னகை
உதிர்க்கிறாள்
துயரமெல்லாம் தூர
ஓடுகிறது.

கடவுள்
கைகொடுப்பான் - என்றும்
கூடவே இருப்பான் என்கிற
உண்மை புரிகிறது.

கை நீட்டி
கால் உதைத்து
புரியாத தேவ மொழியொன்றில்
கவி பாடி
நெஞ்சு நிறைக்கிற - என்
பிஞ்சு முகம்
நிரப்பி விடும்
என் நெஞ்செல்லாம் ஏக சுகம்.