மிதக்குதது வானில்
உறவெனவே உடனே
பறக்குமென் நட்பு
விரிந்திருக்கும் மண்ணில்
எல்லைகள் இல்லை
காற்றிருக்கும் தூரம்
போதவில்லை பயணம்
மனம் விரிக்கும் வெளியில்
தடைகளெதுவும் இல்லை
விரிந்திருக்கும் மனதில்
நெருங்குமோ கவலை
தூக்கி திரிவதில்லை
சேர்ப்பதில்லை உணவை
உண்டவுடன் செரிக்கும்
கிடைத்த இடம் இனிக்கும்
பறக்க வா நண்பா
சிறப்பினை உணரு!